About the Book
நீங்கள் ஒரு துறவியைப்போலச் சிந்திக்கின்றபோது இவற்றைப் புரிந்து கொள்வீர்கள்:
• உங்களுடைய வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு அடைவது
• எதிர்மறைகளை எவ்வாறு மீறுவது
• அளவுக்கதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு நிறுத்துவது
• மகிழ்ச்சியைத் தேடினால் ஏன் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது
• சந்திக்கும் அனைவரிடமிருந்தும் எவ்வாறு கற்றுக் கொள்வது
• நீங்கள் ஏன் உங்களுடைய எண்ணம் அல்லர்
• வெற்றிக்குப் பரிவு இன்றியமையாததாக இருப்பது ஏன்
• இன்னும் பற்பல விஷயங்கள். . .
About the Author(s)
ஜே ஷெட்டி ஒரு கதைசொல்லி, பாட்காஸ்ட் பிரபலம், மற்றும் முன்னாள் துறவி. ஞானத்தை உலகம் நெடுகிலும் பரப்புவதுதான் இவருடைய இலட்சியம். 2017 இல், ஊடக உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய, 30 வயதுக்கு உட்பட்ட 30 முன்னணி நபர்களில் இவரும் ஒருவர் என்று ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டது. காலத்தால் அழியாத ஞானத்தை மிகப் பொருத்தமான, எதார்த்தமான ஒரு வழியில் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வது இவருடைய குறிக்கோளாகும். இவர் நானூற்றுக்கும் அதிகமான காணொளிகளை உருவாக்கியுள்ளார். அவற்றை 500 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.